• May 18 2024

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது! லியோ பார்க்க முன் நெகிழ்ச்சி சம்பவம் செய்த விஜய் ரசிகர்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இவ்வாறான நிலையில், புதுக்கோட்டை - கீரமங்கலத்தில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சிக்காக மேளதாளத்துடன் வந்த விஜய் மக்கள் இயக்கத்தினரின் நற்செயலொன்று தற்போது பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.


அதன்படி, லியோ பார்க்க வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், இஸ்ரைல் - பாலஸ்தீன போரை நிறுத்திட வேண்டி இரண்டு நிமிடங்கள் மௌனத்தை கடைபிடித்துள்ளனர்.

இதன்போது, விஜய் மக்கள் இயக்க ஒன்றியத் தலைவர் சண்முகநாதன் கூறுகையில், 'உலக மக்களும் சரி, விஜய் மக்கள் இயக்கத்தினரும் சரி, நடிகர் விஜயும் சரி நாங்கள் அனைவரும் விரும்புவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெறும் போரானது நிறுத்தப்பட வேண்டும் என்பது தான். 

உலக நாடுகளும் தலையிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் போரை நிறுத்திட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்' என்றார். 

லியோ திரைப்படம் பார்ப்பதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் இவ்வாறான நற்செயல் செய்தது தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை வாரி குவித்துள்ளது எனலாம்.

Advertisement

Advertisement