• Sep 20 2024

ஒரே பிரேமில் "காந்தாரா" மற்றும் "தங்கலான்",வைரலாகும் புகைப்படங்கள்.

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

ரிஷப் ஷெட்டியின் மிரட்டும் திரைக்கதை மற்றும் நடிப்பில் உருவான கன்னட திரைப்படமான "காந்தாரா" தமிழ், தெலுங்கு,இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.கன்னட சினிமாவில் "காந்தார" திரைப்படம், "கே.ஜி.எஃப்-2" திரைப்படத்திற்கு அடுத்து, உலக அளவில் 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

காந்தாரா விமர்சனம் – திறவுகோல்

"காந்தாரா" படத்தின் இயக்குனர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி நேற்றைய தினம் சியான் விக்ரமை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.இரண்டு நடிப்பு அசுரர்களையும் ஒரே புகைப்படத்தில் கண்ட ரசிகர்கள் ஒரே பிரேமில் "காந்தாரா" மற்றும் "தங்கலான்"  என கமெண்ட் செய்து வருகின்றனர்.


நேற்றைய தினம் "தங்கலான்" படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பெங்களூர் சென்றிருந்த படக்குழு அங்கே பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டனர்.அதன் நிறைவை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி சியான் விக்ரமை சந்தித்துள்ளார்.வருகிற 15 ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கிறது "தங்கலான்" திரைப்படம்.


Advertisement

Advertisement