• Sep 17 2024

திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் 'அந்த' காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இதேபோல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். ஒரு வாரம் தாய்லாந்தில் கழித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு திரும்பினர்.

எனினும் நேராக மும்பை சென்ற நயன்தாரா ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். மும்பை சித்ரகூட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு முடிந்து நயன்தாரா வெளியே வந்த போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் படமாக்கப்படும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சித்ரகூட் ஸ்டுடியோவில் 2 செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கான் மற்றும் அவருடைய குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தக் குடும்பக் காட்சியில்தான் தற்போது ஷாருக்கானுடன் நடித்து வருகிறாராம் நயன்தாரா. ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த மாதம் வெளியானது. இதில் முகம் முழுக்க பேண்டேஜ் சுற்றியப்படி இருந்த ஷாருக்கானின் லுக் வைரலானது. இதனிடையே ஜவான் படத்தில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement