• May 22 2024

உணர்ச்சி வசப்பட்டு செண்டை மேளம் அடித்த நடிகர் விக்ரம்- இப்போ ட்ரெண்டிங்கே இந்த வீடியோ தானப்பா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என்பன அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அத்தோடு இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


இந்த நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில், தற்போது இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக கேரள மாநிலம் சென்றிருந்தனர்.

அப்போது அங்கே நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செண்டை மேளம் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், நடிகர் விக்ரம் களத்தில் இறங்கி, செண்டை மேளம் அடிக்கத் தொடங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் தனது கேப்ஷனில், "செண்டையுடன் உங்களின் இதய துடிப்பு sync ஆவதை போல வேறு ஏதும் அமைவதில்லை" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement