• Apr 30 2024

லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்கும் நடிகர் ஜெயம் ரவி- கதையைக் கேட்டதும் மெர்சலாகிட்டாராம்- ஒருவேளை தளபதி 67ஆக இருக்குமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் குறைந்த திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் இவர் இயக்கிய நான்கு திரைப்படங்களும் வேற லெவலில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.தற்பொழுது தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார்.

பான் இந்தியா படமாக தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளது.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


 இது LCU (Lokesh Cinematic Universe) படமா அல்லது புது கதைக்களத்தில் உருவாகும் படமா என்பதே இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், தற்போது LCU-வில் மற்றொரு நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் யாரென்றால்,நடிகர் ஜெயம்ரவி தான் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை காட்டி இந்த காம்போ இணைய வாய்ப்பு இருக்கா என ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ் தனக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை வேறலெவலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அவர் சொல்வதைப் பார்த்தால், ரோலெக்ஸ் சூர்யா போல் விரைவில் LCU-வில் இணைந்துவிடுவார் போல தெரிகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீசாகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ள செய்தி மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement