• Apr 27 2024

ஜீ தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள அச்சும்மா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சேனல்களில் ஒன்றாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவரே தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் தனது சின்னத்திரை வாழ்க்கையை சன் டீவியில் ஆரம்பித்து அதன்பின் விஜய் டீவியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அதற்குப் பின்னர் தான் ஜீ தமிழ் டீவிக்கு சென்றார்.

இவ்வாறாக மாறி மாறி தொலைக்காட்சி சேனல்களில் தனது பணியை ஆற்றி வந்த அர்ச்சனா விஜய் டீவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' இல் சீசன் நான்கில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்காக பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்.

இவ்வாறாக மீண்டும் விஜய் டீவிக்கு வந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'Mr. And Mrs சின்னத்திரை' நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இவ்வாறாக சின்னத்திரையில் கலக்கி வந்த இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' என்ற படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துப் பெரிய திரையிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார். அதில் ஒன்று தான் 'சூப்பர் மாம்'. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது அழகிய மகள் சாரா இருவரும் இணைந்து கலகலப்பான முறையில் தொகுத்து வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் 'சூப்பர் மாம்' நிகழ்ச்சியின் புதிய சீசன் தற்போது தொடங்கவுள்ளதாம். இதற்காக மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது மகளுடன் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்களாம் அர்ச்சனா மற்றும் சாரா.

மேலும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆனது ப்ரோமோ வீடியோவாக வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement