• Sep 19 2025

33 ஆண்டுகால திரைப்பயணம்..! விஜயின் அரசியல் வருகையை சுட்டுகிறாரா அஜித்?

luxshi / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், தனது 33 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகர்களை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்” என்ற வாக்கியம் கவனம் ஈர்த்துள்ளது.


முன்னர் 31 அல்லது 32 ஆண்டுகள் நிறைவடைந்தபோதோ, இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடாத அஜித், இந்த ஆண்டு மட்டும் இப்படிச் செய்தது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


சமீபத்தில், ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை, ஏ.ஆர். முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் அனிருத், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோருடன் பகிர்ந்திருந்தார். ஆனால், நீண்ட காலமாக அஜித்துடன் நட்பில் இருந்த வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ரமேஷ் கண்ணா போன்றோர் அந்த படத்தில் இல்லாதது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், “ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன்” என்ற அவரது கூற்று, யாரை குறிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சிலர், இது நடிகர் விஜயின் அரசியல் வருகையை மறைமுகமாகச் சுட்டுகிறது என கருதுகின்றனர்.


மொத்தத்தில், இந்த அறிக்கை மற்றும் நண்பர்கள் தினப் புகைப்படம் — இரண்டிலும் ஒரு உள்அர்த்தம் மறைந்திருப்பதாக ரசிகர்களும், வட்டாரங்களும் ஆராய்கின்றன.

Advertisement

Advertisement