• May 10 2024

10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க முடியாது…மேலூர் தம்பதியினர் உறுதி.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி. இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்ததோடு அனைவருக்கும் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கெதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோர விட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை தம்பதினர், தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் என குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த தகவல் சமூகவலைத்தளத்தில் எங்கும் பரவியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், தவறினால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் ரூ.10 கோடி கேட்டு தங்களுக்கு அனுப்பிய நோட்டிசை நடிகர் தனுஷ் திரும்ப பெற வேண்டுமெனவும் தனுஷ் எங்கள் மகன் என்ற விவகாரத்தில் நாங்கள் ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. சட்டபடி சந்திக்க தயாரென மேலூர் கதிரேசன் தம்பதியரின் வழக்கறிஞர் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் தற்போது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement