ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் 'சரிகமப' நிகழ்ச்சியானது பல்வேறு நபர்களை நல்ல நிலைமைக்கு உயர்த்தி இருக்கின்றது. அதாவது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட மியூசிக் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி ரமணியம்மாள். குறிப்பாக இவர் நாட்டுப்புற பாடல்கள் பலவற்றை பாடி பலருடைய நெஞ்சங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். மேலும் தமிழில் வெளிவந்த 'காத்தவராயன்' என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் அடிமையாகினர்.
இந்நிலையில் பிரபல பாடகி ரமணியம்மாள் இன்றைய தினம் வயது மூப்பால் மரணமடைந்துள்ளார். இவருடைய இந்தத் திடீர் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவருடைய மரணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!