• Jul 09 2025

கமலாவின் மானத்தை வாங்கிய கோபி.. ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த சர்ப்ரைஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில்,  கோபி நன்றாக குடித்திருக்கும் நிலையில், அவரை வீட்டில் விட்டு விட்டுச் செல்லலாம் என செழியன் காரில் ஏற்றிச் செல்ல, அவர் குடி வெறியில் அருகில் இருப்பது யார் என தெரியாமல் டிரைவர் என நினைத்து கதைத்துக் கொண்டுள்ளார். 

அந்த நேரத்தில் பாக்கியா கால் பண்ண எழில் அவரை சத்தம் போடாமல் இருக்குமாறு சொல்லி பேசிக் கொண்டிருக்க, அவர்  சத்தம் போடுவது கேட்டு விட்டது. இதனால் என்ன நடந்தது என்று பாக்கியா கேட்க, எழில் வெளியே வந்து நடந்ததை சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து கோபியை ராதிகா வீட்டுக்கு கூட்டிச் செல்ல, செழியன் உள்ளே கொண்டு போய் அவரை விடுகின்றார். இதை தொடர்ந்து கமலா அவருக்கு பேச, எனக்கு இந்த வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. ராதிகாட அம்மா வரமுன் நானும் பேபியும் சந்தோசமாக இருந்தோம். அவ வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை. அவ  பேய், பிசாசு, ராட்சசி என்று கண்டபடி திட்டுகிறார். இதனால் ராதிகாவும் கமலாவும் செம கோவத்தில் உள்ளார்கள்.


இதை அடுத்து வீட்டுக்கு வந்த எழிலும் செழியனும் வீட்டில் இருக்க, பாக்கியா கால் பண்ணுகிறார். இதன்போது செழியன் அழுது கொண்டே பேச பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார். 

இதை தொடர்ந்து கோவிலில் ஈஸ்வரி, பாக்கியா, இனியா மற்றும் ராம மூர்த்தி பேசிக்கொண்டிருக்க, அங்கு ஈஸ்வரியின் பழைய நண்பி சாவித்திரியை பாக்கியா அழைத்து வருகின்றார். இதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement