தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், தனித்துவமான வாழ்க்கை முறையாலும் உலக அளவில் கவனம் ஈர்த்து வருபவர் நடிகர் அஜித்குமார். சினிமா உலகத்தில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும், தனது தனிப்பட்ட ஆர்வங்களை முழுமையாகப் பின்பற்றி வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தான் கார் ரேசிங்.

கடந்த சில ஆண்டுகளாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் அஜித் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தொழில்முறை ரேஸராக தனது திறமையை நிரூபித்து வரும் அவர், இதற்காக “Ajith Kumar Racing” என்ற தனிப்பட்ட கார் ரேசிங் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் மூலம் அஜித் பல்வேறு ரேசிங் இவென்ட்களில் பங்கேற்று, இந்தியாவின் பெயரை சர்வதேச ரேசிங் உலகில் நிலைநாட்டி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு அபூர்வமான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அஜித்துடன் சேர்ந்து கார் ரேஸில் பயணிக்கும் வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 26ஆம் தேதி, துபாயில் உள்ள புகழ்பெற்ற Dubai Autodrome மைதானத்தில் நடைபெறவுள்ள கார் ரேஸ் நிகழ்வில் அஜித் பங்கேற்க உள்ளார். இந்த ரேஸ் இவென்ட்டில், முன்பதிவு செய்த பொதுமக்கள், அஜித்துடன் நேரடியாக கார் ரேஸில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; சர்வதேச தரத்தில் நடைபெறும் ரேசிங் அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்துடன் கார் ரேஸில் பங்கேற்க விரும்புவோர், கட்டாயமாக முன்பதிவு (Pre-booking) செய்ய வேண்டும். இதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் 86,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, சர்வதேச ரேசிங் அனுபவம், பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழில்முறை பயிற்சி மற்றும் அஜித்துடன் பயணிக்கும் தனித்துவமான தருணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களைப் பொறுத்தவரை, தங்கள் விருப்பமான நடிகருடன் நேரடியாக ரேஸ் காரில் பயணிப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் அனுபவமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இந்த முன்பதிவு விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ரேஸ் அனுபவத்தில் பங்கேற்க சில முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, பங்கேற்பாளர்களின் வயது 16 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய், முதுகுத்தண்டு சம்பந்தமான பிரச்சனைகள், கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Listen News!