• Apr 30 2024

போஸ்டரை வெளியிட்டதால் படக்குழுவை எச்சரித்த யோகிபாபு...இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. முதலில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் மூலம் ரசிகர்களிடம் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றார்.

அதைத்தொடர்ந்து அவரின் நகைச்சுவை ரசிகர்களை மெல்ல மெல்ல ஈர்க்க இன்று முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றார். சொல்லப்போனால் தற்போது யோகிபாபு இல்லாத படமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார் யோகி பாபு.

ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த யோகிபாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்தாண்டு யோகிபாபு ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இதைத்தொடர்ந்து தற்போது முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் யோகி பாபு மீண்டும் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் யோகி பாபு போட்ட ட்வீட் ஒன்று செம வைரலாகி வருகின்றது.

அதாவது நிதின் சத்யா கதாநாயகனாக நடித்து வரும் தாதா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் நிதின் சத்யா புகைப்படத்தை போடாமல் யோகி பாபுவின் புகைப்படத்துடன் கூடிய போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இதனை பார்த்த யோகி பாபு, இப்படத்தில் நிதின் சத்யா தான் ஹீரோ, நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். எனவே தயவுசெய்து விளம்பரத்திற்காக இதுபோல் செய்யாதீர்கள் என ட்வீட் போட்டுள்ளார். அத்தோடு இந்த டீவீட்டிற்கு கதாநாயகன் நிதின் சத்யா நன்றி கூறியுள்ளார். யோகி பாபுவின் இந்த செயலால் அவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த டீவீட்டிற்கு ஹீரோ நிதின் சத்யா நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு யோகி பாபுவின் இந்த செயலால் அவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement