• May 19 2024

பிக்பாஸ் விக்ரமன் மீது போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை... சூடு பிடிக்கும் வழக்கு... இறுதியில் அறம் வெல்லுமா..?

Prema / 9 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி தன்னைக் காதலித்து ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக கூறி ஏற்கெனவே புகார் ஒன்றினை முன்வைத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.


இதுகுறித்து பரபரப்பான தகவல் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வர அதற்கு சமீபத்தில் விக்ரமன் விளக்கம் ஒன்றினையும் கொடுத்திருந்தார். அதாவது விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கிருபா முனுசாமி என்பவர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். குறிப்பாக ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே இந்தக் கதைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இந்தப் பிரச்சினையில் ஒரே ஒரு நபர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார், என் மீது குற்றம் சாட்டுபவர்களை விட நான்தான்" எனக் குறிப்பிட்டு அவர் விக்ரமனுக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் ஒன்றினை கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கூறியிருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது கிருபா முனுசாமியின் புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.  அந்தவகையில் விக்ரமனிடம் விசாரணை நடத்த போலீசார் அதிரடியாக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இறுதியில் உண்மை யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement