• Mar 15 2026

திரிஷாவை மடக்கிய செய்தியாளர்கள்.. விஜய் பற்றி கேட்டதும் அமைதி காத்தது ஏன்.?

shali / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான செய்திகள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவாதங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் கலந்து கொண்ட தகவல்கள் வெளியாகின. அந்த நிகழ்வில் இருவரும் ஒரே காரில் வந்தது குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட நிலையில், நடிகை திரிஷாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பினர். குறிப்பாக விஜய்யுடன் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த கேள்விகளுக்கு நடிகை திரிஷா எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக அங்கிருந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement