• May 14 2024

ஏன் செருப்பு தைப்பவர் பறக்கக் கூடாது? - நச்சுன்னு கேள்வி கேட்ட நடிகர் சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூரரைப் போற்று. இப்படத்தில் அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக வெளியான இந்தப் படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு 69 வது தேசிய விருது வழங்கும் விழாவில் இப்படம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.இதனால் படக்குழு மட்டுமல்லாது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இன்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாள் என்பதாலும் இப்படத்திற்கு கிடைத்த விருதுகள் குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யா பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசிய விடயங்களே வைரலாகி வருகின்றது.

அதாவது பணம் இருப்பவர்கள் மட்டும் தான் விமானத்தில் செல்ல வேண்டுமா ஏன் ஒரு விவசாயி பறக்க கூடாது ஏன் செருப்பு தைப்பவர் பறக்கக் கூடாது. ஏன் அவங்க தங்களுடைய தனிப்பட்ட விடயங்களுக்காகக போகக் கூடாது. அதற்காக ஏன் அவங்க இரண்டு மூன்று நாள் வெயிட் பண்ண வேண்டும். பணம் இருக்கிறவங்க எப்போ நினைச்சாலும் போகலாம் ஏன் மற்றவங்க போகக் கூடாது. சமூகத்தில பணம் ஒரு பிரச்சினையாக இருக்ககக் கூடாது என்பது தான் கோபிநாத்தின் சிந்தனையாக இருந்தது. அதை தான் இந்த படத்திலும் சொல்லியிருக்கு என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார் என்பதும் முக்கியதாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement