• Jul 27 2024

நேருக்கு நேராக கோபிக்கு எழில் விட்ட சவால்.. உறுதியாக இருக்கும் செழியன்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரூமில் கோபி நடந்தவற்றை நினைத்து அங்குமிங்கும் நடந்து கொண்டு இருக்க, ராதிகா இப்போ என்னாச்சு நினைச்ச அளவுக்கு ஒன்றும் நடக்கல தானே என்று சொல்ல, அவர் வீட்டார் தன்னை வெறுத்தை பற்றி சொல்லி புலம்புகிறார். மேலும் நீ உன் பக்கம் பாக்கிறா, என் பக்கம் ஜோசிக்கிறா இல்லை என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து இனியாவை தூங்க வைத்துவிட்டு பாக்கியா தூக்கம் வராமல் இருக்க, அங்கு எழில் வர பாக்கியா தூங்குவது போல நடிக்கிறார். இதன் போது எழில் பாக்கியாவின் தலையை தடவி அழுதுவிட்டு போகிறார். அதன்பின் செழியன் வந்து பாக்கியா அருகில் இருந்து கண் கலங்குகிறார். அதன்பின் பாக்கியா எழுந்து இருந்து அழுகிறார்.


மறுநாள் காலையில் கோபி வார்க்கிங் போக, அங்கு வந்த எழில் அவரை வீட்டை விட்டு போகுமாறு சொல்லுகிறார். இதனால் கோபமடைந்த கோபி நான் போக மாட்டேன். என் அம்மாவுக்காக தான் இருக்கேன் என்று சொல்ல, நான் போக வைத்து காட்டுறேன் என்று சவால் விட்டு போகிறார்.

இதையடுத்து கோபி நடந்தவற்றை ராதிகாவிடம் சொல்ல, அவரும் நாம வீட்டை விட்டு போவம் என்று தானே சொன்னன். இல்லாட்டி தினமும் இப்படி பிரச்சினை நடக்கும் என்று சொல்லுகிறார்.

அதன்பின் எழில் செழியனிடம் நடந்தவற்றை சொல்லி, இப்போ அவர் கீழ வந்து நாடகம் போடுவார், நீ மனசு மாறல தானே, சப்போர்டுக்கு இரு என சொல்ல, அந்த மனிசன் வீட்ட விட்டு போகணும் என்று செழியனும் உறுதியாக இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement