• Jul 27 2024

முதல் படமே ரூ.100 கோடி வசூல்.. 2வது படமும் சிவகார்த்திகேயனுடன்.. விரைவில் படப்பிடிப்பு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரின் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இரண்டாவது படமும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’டான்’. இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் வேறு சில பிரபல நடிகர்களின் படங்களை இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி முடிந்து முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது சிபி சக்கரவர்த்தி மற்றும் அவருடைய உதவியாளர்கள் வசனம் எழுதும் பணியில் தற்போது இருப்பதாகவும் அது மட்டுமின்றி நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணியும் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் படத்தில் பிரியங்கா மோகன் நாயகி ஆக நடித்த நிலையில் மீண்டும் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல் ’டான்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அனிருத் இந்த படத்தில் இசையமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அவர் சிபி சக்கரவர்த்தி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement