• May 15 2024

உங்கள் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டாலே நிம்மதி வந்து விடும்- ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் தலைவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடி வரும் நடிகர் தான் ரஜினிகாந்த். 70 வயதைக் கடந்த நிலையிலும் அதே வேகத்துடன் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பெயர், புகழ், பெரிய அரசியல்வாதிகளின் கான்டாக்ட் இவை அனைத்தும் இருந்தபோதிலும் நிம்மதி, மகிழ்ச்சி 10 சதவிகிதம் கூட இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.இது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினியை சீண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி தனது படங்களில் வருவதுபோல தனது அனைத்து சொத்துக்களையும் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, இமயமலையில் நிம்மதியை தேடலாமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் லிங்கா, முத்து போன்ற படங்களில் ரஜினி தனது சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு தான் ஏழையாக மாறுவது போல காட்சிகள் அமைந்திருக்கும். அதை குறிப்பிட்டே தற்போது ப்ளூ சட்டை மாறன், ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அவரை கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement