• May 14 2024

விக்ரமனின் திருமணம் பற்றிக் கேட்டதும் உடனே கண்ணீர் விட்ட அவரின் தந்தை... காரணம் என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆவது சீசனானது 50நாட்களை கடந்து பரபரப்பு மற்றும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத வகையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக மைனா உள்ளே நுழைந்தார். எனவே 21 அட்டகாசமாக ஆரம்பமாகி இருந்தது. 

மேலும் இந்நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரத்திலும் ஒருவர் வெளியேறுவது வழமை.  அந்தவகையில் தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். 


இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவரே விக்ரமன். இந்நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி இருக்கின்றார். மேலும் இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற சீரியலில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியலானது சில காரணங்களால் பாதியிலேயே சில நிறுத்தப்பட்டது. 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விக்ரமனின் தந்தை தனது மகன் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கின்றார். அதில் அவர் தனது மகனின் உடைய திருமணம் குறித்து பேசும்போது,  அவருக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை, கேட்டால் இப்போதைக்கு வேண்டாம் என கூறுகிறார்.

அவர் மனதில் யாருக்கும் தெரியாமல் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என நினைக்கிறேன், நல்ல நிலைமைக்கு வந்து சாதித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா என தெரியவில்லை என்று கண் கலங்கியவாறு அப்பெட்டியில் கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement