தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை நேராகவும் உண்மையாகவும் பகிர்ந்து வரும் திரைப்பட விமர்சகர் மற்றும் சமீபத்திய சமூக பேச்சாளர் அந்தணன், தற்போது கமல்ஹாசன் மற்றும் 'தக் லைஃப்' படம் குறித்த சர்ச்சையின் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் பேசும் போது, கர்நாடக நீதிமன்றத்தில் கமலுக்கு நடந்ததெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை என்ற கருத்தைத் திறமையாக பதிவு செய்துள்ளார் அந்தணன். “கமலுக்கு எதிராக நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மக்களுக்கு ஏற்புடையதாக இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” எனக் கூறிய அந்தணன், மக்களை நேரடியாக சிந்திக்க வைக்கும் வகையிலும் கருத்துத் தெரிவித்தார்.
அந்தணன் கூறியதாவது, “நீதிபதி, கமலுக்கு நேரடியாக ‘மன்னிப்பு கேட்க முடியாதா?’ என்று கேட்கிறார். அதற்கும் பதிலில்லை. கடிதத்தில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையே இல்லை. இதெல்லாம் ஒரு சாதாரண வாதமா? பெரிய அரசியல், மொழி விவாதமா? என்பது உங்கள் பார்வை!” என்றார்.
முன்னொரு காலத்தில் சினிமா உலகின் குரல் என அழைக்கப்பட்ட கமலுக்கு, இப்போது திரையுலக அமைப்புகள் எந்த வகையிலும் ஆதரவு தரவில்லை என்றும் கவலையுடன் குறிப்பிட்டார் அந்தணன். “60 ஆண்டுகளாக இந்த சினிமாத் துறையில் வாழ்ந்து வந்தவர் கமல். சினிமாவை வளரச் செய்தவர். அவரைப் பாதுகாக்க இந்த துறையில் ஒருவர் கூட சத்தமாக பேசவில்லை. இது தான் வேதனை.” என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறாக அந்தணன் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையில் அமைந்துள்ளது.
Listen News!