• Mar 25 2026

எனக்கு அப்போ தேவைப்பட்டத தான் இப்போ சேவையா செய்றேன்... kpy பாலா பதில்... ரசிகர்கள் பாராட்டு...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி புகழ் பாலா தொடர்ந்து பல நல்ல விடையங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பள்ளி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இவர் ஊடகங்கள் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார். 


நான் செய்ற சேவைக்கு வெளிய சில பேர் நெகட்டிவா சொன்னாலும் பலர் வாழ்த்துறாங்க அதுனால ரொம்ப சந்தோசமா இருக்கு. யாரிடமும் கேட்கவில்லை, நிதி உதவி என்று யாரும் செய்யவில்லை நான் உழைத்ததில் மக்களுக்காக சேவை செய்கிறேன். என்னால முடிந்த உதவி இது என கூறியுள்ளார். 


அப்போது ஒரு ஊடகவியலாளர் சேவை செய்யணும்னு என்று தோன்றியதன் காரணம் என்ன என்று கேட்க அதற்கு பாலா "எனக்கு அப்போ தேவைப்பட்டத தான் இப்போ சேவையா செய்றேன்" என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அங்கு இருந்தவர்கள் அனைவரும் அருமை அருமை என கைகள் தட்டி வாழ்த்தினர். 

Advertisement

Advertisement