பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களைக் கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசன் ஆனது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்போட்டியாளர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்றால் அது நம்ம ஜிபி முத்து தான்.
இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நாளுக்கு நாள் சப்போர்ட் பெருகி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு பின் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் ஜிபி முத்து. அதாவது நேற்று நள்ளிரவு அசல் கோளார் மற்றும் தனலட்சுமி இடையே சண்டை நடைபெற்றது. அசல் தன்னை உருவகேலி செய்ததை தைரியமாக எதிர்த்து நின்று தட்டிக்கேட்டார் தனலட்சுமி.
இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சக போட்டியாளரான அசீம், தனலட்சுமியை வீட்டுக்கு வெளியே அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த விக்ரமன் தனலட்சுமியிடம் என்ன பிரச்சனை.. ஏன் அழுகுற என கேட்டார். ஆனால் அசீம், தனலட்சுமியை விக்ரமனுடன் பேசவிடாமல் வெளியே அழைத்து சென்றார். இதனைத் தொடர்ந்து விக்ரமன் கோபமடைந்து அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவர்களுக்கு இடையே வந்த ஜிபி முத்து, நீங்க அதைப்பற்றி பேசக்கூடாது என சொல்லி விக்ரமனை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை பேச விடாமல் தடுத்த ஜிபி முத்துவிடம் கடிந்துகொண்ட விக்ரமன், "நீங்க என் ஊர்காரர் என்பதால் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். என்ன நீங்க தடுக்காதீங்க. நான் பேசுவதற்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா" என கோபத்துடன் கேட்டார்.
இதன்பின் சமாதானப்படுத்தும் வகையில் பேசிய ஜிபி முத்து, பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் உங்களை தடுத்தேன் எனக்கூறி, தனலட்சுமி அசலிடம் எகிறியது தவறு என பேசினார்.
ஒரு பொம்பள புள்ள எகிறினால் ஆணுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்றும், பொண்ணுங்க ஆண்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜிபி முத்து பேசியது அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
#GPmuthu Old generation mindset. #Vikraman is progressive mindset. Hope Vikraman change old mindset of GP.Muthu #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/Xwtlu2DMG2
அந்த நேரத்தில் கடந்த வாரம் தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே நடந்த சண்டையை பற்றியும் பேசிய ஜிபி முத்து, தான் மன்னிப்பு கேட்டும் தனலட்சுமி தன்னை மன்னிக்கவில்லை என்று கூறினார். இதுவே எனது மகளாக இருந்திருந்தால் செருப்பாலயே அடிச்சிருப்பேன் என சொன்ன ஜிபி முத்துவிடம் இதெல்லாம் தப்பு, உங்க பொண்ணா இருந்தாலும் செருப்பால அடிக்கக்கூடாது என கூற, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாத ஜிபி முத்து தொடர்ந்து ஆணாதிக்க தொனியிலேயே பேசினார்.
அவரின் இந்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. அதாவது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் செல்வேன் என சொன்னதற்காக சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது போல் ஜிபி முத்துவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
@vijaytelevision S3 Saravanan ku eppdi red card kudutheengalo adhey madri inda #gpmuthu kum red card kuduthu thorattu..inda convo nalaki main episode la varanum #BiggBossTamil6 #vikraman #dhanalakshmi https://t.co/V0pplARSSp
#Vikraman #Dhanalakshmi fight sequences exposed #gpmuthu dominant male attitude. Avaru ponna seruppala kuda adipaaraam. Potta pasanga adangi ponumam 🤣🤣 thalaivare u lost my respect. Unga village sithanthamlam udankudi yoda vachu kanum. #biggbosstamil#biggbosstamil6 Dei Muthu poda veliya.. Potta pulla Porumiya poganumaam.. Tik tok tik tok nu.. Chaik.. Nee veliya vaa naa unaku anupuve oru letter.. #BiggBossTamil6 #Gpmuthu u r wrong boys and girls are equal ..u came frm the background where still some thoughts are backwards …..u hv change ur mind …u r in a platform which is watched diff kinds of audience..so bef saying anything think and say #BiggBossTamil6 I really Pity GP Muthu's Daughter
Evalo money provide panalum, oru daughter ku respect ilana worst father
He feels proud of saying that..🤢🤢#BiggBossTamil6
Listen News!