• Apr 25 2024

வரலாறு காணா வசூலை எட்டி வரும் பொன்னியின் செல்வன்- வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சோழப் பேரரசின் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல் தான் பொன்னியின் செல்வன்.இந்த நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது. அத்தனை புத்தகங்களை எப்படி இவர் இரண்டு பாகங்களாக எடுத்தார் என்ற ஆச்சரியம் மக்களிடம் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் புத்தகத்தை படித்தவர்கள் படம் அப்படியே உள்ளது என மனதார பாராட்டியுள்ளார்கள்.

எனினும் தற்போது படத்தை அதிகம் புக்கிங் செய்து வருகிறார்கள், தீபாவளி விடுமுறை வேறு வருகிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமென கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை மேலும் சில நாட்கள் திரையரங்குகளில் ஒளிபரப்ப திரையரங்குகள் முடிவு செய்துள்ளார்களாம். எனினும் இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 460 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்த தீபாவளி விடுமுறை முடிந்ததும் பட வசூல் ரூ. 500 கோடி தாண்டி சாதனை படைக்கும் என்கின்றனர்.





Advertisement

Advertisement

Advertisement