உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தில் சிறப்பான டாஸ்க்குகளை சேர்த்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் களமிறங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.
இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் இருந்தவர்கள், பொதுமக்கள் என எல்லா துறைகளில் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்கள்.
இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் ஜி.பி.முத்து எல்லோரும் வந்தாச்சு பிக்பாஸ் என கூறுகின்றார்.கதை சொல்லும் டாஸ்க்கில் இன்று 6பேர் கூறப்போவதாக அறிவிக்கப்படுகின்றது.குயின்ஸி, ஆயிஷா ,ரச்சிதா, சாந்தி விக்ரமன் ,மணிகண்டன் என 6பேரும் கதை சொல்கிறார்கள்.அந்த நிலையில் மாறி மாறி எல்லோரும் பட்டனை அழுத்தி அவர்களை கதை சொல்ல விடாமல் தடுக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் விக்ரமன் கதை ஆரம்பிக்கும் போதே எல்லோரும் ஓடி வந்து பட்டனை அழுத்தி வெளியில் கொண்டு வருகிறார்கள்.அவர் வருவதைப் பார்த்து எல்லோரும் கலாய்த்துசிரிக்கிறார்.அத்தோடு சாந்தி தனது கதையை நினைத்து வெளியில் அழுகின்றார்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!