• May 05 2024

போலீசாரால் மடக்கிப்பிடித்த சீரியல் நடிகர் அர்ணவ்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு வாரமாக பெரும் பரபரப்பான  பேசப்பட்ட விடயம் சீரியல் நடிகர் அர்ணவ்-திவ்யாவின் குடும்ப பிரச்சனை தான்.

அதாவது தனது கணவரான சீரியல் நடிகர் அர்ணவ் தான் கர்ப்பமாக இருந்தும் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்துகொண்டு  தன்னை தாக்கி விட்டதாக கூறி போலீசில் புகார் கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால் அர்ணவ் தான் அப்பிடி எதுவும் செய்வில்லை என கூறி இருந்தார்.


இவ்வாறு இருக்கையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது  கொலை மிரட்டல் வன்புணர்வு  உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வாறு இருக்கையில் அர்ணவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை அழைக்கப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார்.இதற்கு  முறையாக ஆஜராகுமாறு அர்ணவிற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இன்று அவர் விசாரனைக்கு ஆஜராகி இருக்க வேண்டும்.ஆனால் அவர் ஆஜராகவில்லை.ஆனால் அவரது வழக்கறிஞர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அர்ணவிற்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவரால் ஆஜராக முடியாது என்றும் கூறி இருந்தார்.

ஆனால் அர்ணவிற்கு உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும் போலீசுக்கு தெரிய வர அவர்கள் உடனியான விரைந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

நேமம்  என்ற இடத்தில் படப்பில் இருந்த அர்ணவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்து வருகின்றனர்.அதாவது அர்ணவ் போலீசாரிடம் சிக்கி விடுவமோ என தெரிந்து விசாரனைக்கு ஆஜராகவில்லை என போலீசார் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.இடைப்பட்ட நாட்களில் இவர் முன்ஜாமின் எடுக்கவும் முயற்சி செய்துள்ளார் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement