இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் ஷங்கர்.தமிழ் சினிமாவில் எந்திரன், 2.o போன்ற பிரம்மாண்ட படங்களை கொடுத்தவர் தான் ஷங்கர் .இதனால்தான் அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும் தற்போது லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகின்றார். மேலும் இப்படத்தில் கமல், காஜல்அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அத்தோடு தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரணின் 15வது படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் ஷங்கர் மீது பகீர் குற்றச்சாட்டை தயாரிப்பாளர் கே ராஜன் தெரித்துள்ளார். அதாவது ஷங்கர் பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பதில் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஷங்கர் 500 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தால் மறைமுகமாக அதில் 50 கோடியை எடுத்துக்கொள்வார் என கே ராஜன் கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டர் யாரிடமோ கூறியுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தனக்கு இந்த செய்தி வந்ததாக கே ராஜன் கூறியிருந்தார்.சாதாரணமாக ஒரு மளிகைக்கடையில் 100 ரூபாய் எடுத்தாலே கடையின் உரிமையாளர் கண்டுபிடித்து விடுவார்.
இவ்வாறு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்திற்கு கணக்கு வழக்கு சரியாக பார்க்கப்படும்.மேலும் இதில் எப்படி ஷங்கர் 50 கோடி எடுக்க முடியும். கோடிக்கணக்கில் பணம் குறைந்தால் தயாரிப்பாளர் கண்டுபிடிக்காமல் எப்படி இருப்பார்.
அத்தோடு தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இதையெல்லாம் சரி பார்த்து தான் கொடுப்பார். ஏதோ ஒருவரைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி ஷங்கர் பற்றி தப்பாக பேசி உள்ளார் கே ராஜன் என பலரும் கூறி வருகிறார்கள்.
Listen News!