• May 07 2024

குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை- அதிர்ச்சித் தகவலைக் கூறிய நடிகர் ராம் சரண்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமகியிருந்தாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக உறர்ந்த நிற்பவர் தான் நடிகர் ராம்சரண். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார்.இப்படத்தைத் தொடர்ந்த இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஆர்.சி.15 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கியாரா அத்வானியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வருகின்றார்.

இப்படத்தின் ஷூட்டிங் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ராம்சரண் – உபாசனா தம்பதியினர் திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவர்கள் இன்னும் குழந்தைப் பெற்றுக்கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ராம்சரண், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். அதனால்,அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை சினிமாவில் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புள்ளது. அதேபோல் தனிப்பட்ட வாழ்விலும் உயரங்களை அடைய வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது என் மனைவிக்கும் உள்ளது இதற்கிடையில் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement