• May 07 2024

தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய விக்ரம்- இதனால் தான் இப்படியொரு முடிவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் விக்ரம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப வீரம் நிறைந்த ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . 

அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் விக்ரம் கமிட் ஆன திரைப்படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி வருகிறார். இது கே.ஜி.எஃப் கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படம். இதில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார்.  மாளவிகா மோகனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இது தவிர இவரது நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ் நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புக்களும் வேகமாக நடைபெற்று வருகின்றது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக அறிவித்து இருந்தார்.

இப்படியான நிலையில் விக்ரம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகான் திரைப்படத்திற்காக விக்ரம் 14 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம். அதனைத் தொடர்ந்து தங்கலான் படத்திற்காக 22 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம்.இதனை அடுத்து தனது புதிய படங்களுக்கு 30 கோடி சம்பளம் வாங்கலாம் என முடிவு செய்திருக்கின்றாராம்.


சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில் விக்ரம் திடீரென சம்பளம் உயர்த்தியது தயாரிப்பாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement