• Mar 28 2023

என்னைப் பார்த்தாலே கட்டிப்பிடிப்பாங்க என்னால் ஜீரணிக்க முடியவில்லை - நடிகை சில்க் பற்றிய ரகசியத்தை கூறிய பிரபல இசையமைப்பாளர்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் தன்னுடைய கவர்ச்சியான நடிப்பால் இளைஞர்களை கட்டி போட்டவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வந்த இவர், 1996 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் இன்று வரை மர்மமாக தான் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர், மற்றும் இயக்குநராக இருக்கும் கங்கை அமரன், சமீபத்தில் சில்க் ஸ்மிதா குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


அதில் அவர்," நானும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள். சில சமயங்களில் சில்க் ஷூட்டிங் முடிந்தவுடன் என் வீட்டிற்கு வந்து என் மனைவி மற்றும் மகன்களுடன் பேசிக் கொண்டு இருப்பார்".

"சில்க் ஸ்மிதா பார்த்தால் கிராமத்தில் இருந்து வந்தவர் போல் இருக்கமாட்டார். என்னை எங்குப் பார்த்தாலும் காட்டி பிடிப்பார். என்னை மச்சான் என்று தான் அழைப்பார். அவருடைய இறப்பு என்னால் ஜீரணிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement

Advertisement