• Jul 09 2025

’தங்கலான்’ படத்திற்கு திடீர் சிக்கலா? விக்ரம் மட்டும் இல்லையென்றால் அதோ கதிதான்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ரிலீஸ் தேதியும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பா ரஞ்சித் செய்த பதிவு கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நேரடியாக அவர் திமுக அரசை தாக்கி அறிக்கை வெளியிட்டது தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நேற்று அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஏழு கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுங்கட்சி அவரது பதிவை கண்டுகொள்ளவே இல்லை என்றும், மேலும் அவரது படத்திற்கும் பிரச்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியே ஒருவேளை பிரச்சனை வந்தாலும் விக்ரம் ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் பேசி சரி செய்து விடுவார் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் பா ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் ஆளுங்கட்சியை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement