• May 08 2024

விஜய் செட்டில் அமைதியாகவே இருப்பார்- இப்போ அவரைப் பார்க்க பிரமாண்டாக இருக்கு- பிரபல நடிகை சங்கீதாவின் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குவதோடு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகர் தான் விஜய். இவர் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. இப்படம் விஜய்யின் கெரியரில் மிக முக்கியமான திரைப்பம் எனலாம்.

இப்படமானது இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும். இப்படத்தில் வரும் சொல்லாமலே.. யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது என்ற பாடலை தற்காலத்து இளைஞர்களும் ரசிக்காமல் இல்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் சங்கீதா,

இவர் இயக்குநர் சரவணன் என்பவரைத் திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சங்கீதா, கூறியதாவது பூவே உனக்காக படத்தில் பார்த்த விஜய்க்கும், இப்போ விஜய்யை பார்ப்பதற்கும் மிகவும் பிரம்மாண்டமாகவே தெரிகிறார்.

விஜய் செட்டில் அமைதியாகவே இருப்பார் அதிகம் பேச மாட்டார் .படத்தில் ஒரு பாட்டு வருதுனா, பொதுவா அனைவரும் ஹீரோயினியைத்தான் பார்ப்பார்கள். ஆனால், விஜய் சார் படத்தின் பாடல் என்றால், ஹீரோயின் யாருவேனா இருக்கட்டும் அனைவரும் விஜய்யைத்தான் பார்ப்பார்கள் இதுதான் அவரின் ஸ்பெஷல். விஜய்யின் வளர்ச்சி பிரம்மாண்டமா இருக்கு, இதற்காக அவர் தன்னைத்தானே தயார் படுத்திக்கொண்டார் என்றார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. கதை எனக்கு பிடித்திருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று நடிகை சங்கீதா பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement