• May 04 2024

பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பீஜ்ட்.இவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குநராகியுள்ளார் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தையும் லைகா நிறுவனமே முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படத்தின் ஹீரோ யார் என்பதை முடிவு செய்யவில்லை. மேலும் டான் இமாலய வெற்றியால் மீண்டும் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்போது இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கி அதை திரைக்கதையாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.அத்தோடு விஜய்யே சிபி சக்ரவர்த்தியை அழைத்து டான் வெற்றிக்குப் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement