• May 20 2024

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள்... நிவாரணம் வழங்கி உதவிசெய்த விஜய், சூர்யா ரசிகர்கள்...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

சென்னையில் தற்போது மிக்சாங் சூறாவளி மற்றும் கனமழையால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயணைப்பு குழுவினர் , மற்றும் மக்கள் பலர் இணைந்து உதவி செய்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.


தற்போது மக்களுக்கான நிவாரண பொருட்கள்  அநேகமான பகுதிகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் இயக்கம் சார்பாக பல பகுதிகளிலும் நிவாரண பொருட்கள், உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 


நடிகர் சூரிய ரசிகர்கள் இணைந்து பெரம்பூர் ,வியாசர்பாடி ,கொளத்தூர் ,டிவிகேநகர் மற்றும் மாதவரம் ஆகிய   பகுதிகளில் மைச்சாங் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.


மேலும் இன்னும் சில இடங்களில் நடிகர் விஜய் அவர்களில் ரசிகர்கள் சென்று உணவுகள் , தண்ணீர் போத்தல், நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கின்றனர். மேலும் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸீ ஆனந்த் விஜய் சார்பாக நேரில் சென்று பொருற்களை வழங்கி வைத்துள்ளார்.  


Advertisement

Advertisement