• May 18 2024

நயன்தாராவின் ஏடாகூடமான புகைப்படத்திற்கு லைக் செய்து சிக்கலில் சிக்கிய விக்னேஷ் சிவன்- பங்கம் பண்ணி வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா, இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து இருந்த நிலையில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. தொடர்ந்து தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள்

அதன்படி, விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் AK 62 படத்திற்கான கதை மெருகேற்றும் பணியிலும், நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் செய்த ஒரு செயல் நயன்தாரா ரசிகர்களை கோபடுத்தியுள்ளது. அதாவது எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் ஏடாகூடமான புகைப்படம் ஒன்றை லைக் செய்துள்ளார்.

இதனை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் சற்று கோபத்துடன் எதற்காக அந்த மாதிரி பக்கங்களில் புகைப்படங்களை லைக் செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பல நெட்டிசன்கள் அதனை மீம்ஸ் ஆகவும் பரப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement