• Apr 25 2024

ஹேக்கருக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...இது தான் விஷயமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் கணக்கை முடக்கியவர்களுக்கு நன்றி கூறிய விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார் விக்னேஷ் சிவன்.

இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார் விக்னேஷ் சிவன். அத்தோடு விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதை அஜித்துக்கு ஒத்து வராததால் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விக்னேஷ் சிவன் பிரபல பாலிவுட் நடிகரை வைத்து பேன் இந்தியா படத்தை இயக்கவுள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை நயன்தாரா மூலம் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. சர்க்கிள் என்ற ஹேக்கர்ஸ் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பக்கத்தை முடக்கி வைத்திருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில், தற்போது விக்னேஷ் சிவன் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், "என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் நிம்மதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க " என்று தெரிவித்து  தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகை நயன்தாராவை திருமணம் செய்தார்.அத்தோடு கடந்த அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்கும் காலம் முதலே என்ன செய்தாலும் தலைப்புச் செய்தியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement