• Apr 28 2024

செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டிய வடிவேலு- கோபத்தில் செந்தில் எடுத்த முடிவு- அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் எபிசோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். வாங்க அந் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

புவனாவை கடத்திய செல்வா தனது மகளை தன்னிடம் ஒப்படைத்தால் தான் புவனாவை விடுவிப்பேன் என கூறியிருந்த நிலையில் அமுதாவுக்கு வடிவேல் பரமு சின்னா மீது சந்தேகம் வந்தது. இதனால் அமுதாவுக்கு வடிவேலு, செல்வா மகளுடன் திருமணம் செய்து கொள்ளப் போவது தெரிய வர மாணிக்கத்துடன் கோயிலுக்கு வருகிறார். இருவரும் கோயிலுக்கு வருவதற்கு முன்னால் வடிவேலு செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டி விடுகின்றார்.


இதனால் அமுதா வடிவேலுவிடம் சண்டையிடுகிறாள். புவனாவை பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறாள்‌. அந்த பெண்ணை கொண்டு போய் விட்டா தான் புவனாவை காப்பாத்த முடியும் என சொல்ல வடிவேலு முடியாது என சொல்கிறான். இதனை தொடர்ந்து அமுதா சுமதியை இழுத்து ஆட்டோவில் ஏற்ற.மாணிக்கம், அமுதா மற்றும் சுமதி என மூவரும் ஆட்டோவில் செல்கின்றனர். மறுபக்கம் குமரேசன், பழனி இருவருக்கும் வடிவேல் தாலி கட்டிய விவரம் தெரிய வர சிதம்பரத்துக்கு போன் செய்து செல்வாவின் மகளை வடிவேலு கல்யாணம் செய்து கொண்டான், இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என சிதம்பரத்தை பயமுறுத்துகின்றனர்.

சிதம்பரம் செல்வாவை சந்தித்து தனக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்லிக் கொண்டிருக்க, அமுதா சுமதியை அழைத்து வருகிறாள். அமுதா சுமதியிடம் வடிவேலு ஒரு தப்பான ஆளு, நீ உங்க அப்பா கூட இருக்குறது தான் நல்லது என சொல்கிறாள். சிதம்பரம் அமுதாவிடம் அந்த பெண்ணுக்கு ஊர் நியாயம் எல்லாம் சொல்ற, அது உனக்கு உங்க அப்புச்சிக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாதா என கேட்கிறார்.


பின்னர் அமுதா செல்வாவிடம் நான் சொன்னபடி உங்க பெண்ணை கொண்டு வந்து ஒப்படைச்சிட்டேன், புவனாவை விடுங்க என சொல்ல, செல்வா புவனாவை விடுவிக்க அமுதா அழைத்து செல்கிறாள்.

அடுத்ததாக சிதம்பரத்திடம் செல்வா அமுதாவை பற்றி பெருமையாக பேசுகிறார். காலேஜிலிருந்து வீடு திரும்பும் செந்தில் அமுதாவிடமும் அன்னலட்சுமியிடமும் இவ்வளவு நடந்திருக்கு என் கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலயா, என்னை ஒரு சொம்பையாக நினைக்கிறீங்கல்ல என கோபம் கொள்ள அமுதா நடந்தவற்றை சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை அறிய தினந்தோறும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை  காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement