• Sep 21 2024

குண்டுகள் துளைக்காத காரில் பயணம்- துப்பாக்கி லைசென்ஸ் -நடிகர் சல்மான் கானுக்கு ஏன் பலத்த பாதுகாப்பு..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சல்மன் கானுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவூட் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இதன் பிறகு மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்துறையில் அறிமுகமாகினார்.

அதனைத் தொடர்ந்தும் பல சூப்பர் ஹிட் படங்களில நடித்து வரும் இவர் எப்போது் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் உடையவர். இதனால் தனது உடம்பை எப்போதும் கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்.

இவர், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், கடந்த மாதம் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கானின் உதவியாளரிடம் ஒருவர் கடிதம் கொடுத்திருந்தார்.

மேலும் அதில், சல்மான் மற்றும் சலீம் ஆகிய இருவரை கொல்லத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை உலுக்கியது.


இதையடுத்து, நடிகர் சல்மான் கடந்த மாதம் 22 ஆம் தேதி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, அவருக்கும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குஆன கைத் துப்பாக்கிக்காக லைசன்ஸ் வேண்டி விண்ணப்பித்தார்.

இதனையடுத்து நடிகர் சல்மான் கான் எங்கு சென்றாலும் குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொறித்திய காரில் சென்று வருகின்றார்.

இந்த நிலையில், கொலை மிரட்டலைத் தொடர்ந்து, சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள போலீஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement