• May 19 2024

இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்- அப்போ அரசியலுக்கு வருவது கஃன்போமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் திரையுலகில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபுறம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.மேலும் விஜய் அடிக்கடி அரசியல் நோக்கத்துடன் பல்வேறு செயல்களை தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தினரை வைத்து செய்து வருகிறார்.

ஏற்கனவே பள்ளி குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல வருடங்களாகவே, உணவு, உடை மற்றும் சாப்பாடு போன்ற உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் விஜய்யின் அறிவுறுத்தல் படி, அரசியல் தலைவர்கள் பிறந்தநாளில், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், பட்டினி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்கினர்.


இதை தொடர்ந்து, இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடித்த, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பில் 600 / 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியதுடன், ஊக்கத்தொகையும் கொடுத்தார் விஜய். அதே போல் இந்த நிகழ்ச்சியில் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயங்களும் கவனத்தை ஈர்த்தது.

ஒரு தரப்பினர் விஜய்யின் இந்த செயல்களை பாராட்டி வந்தாலும், மற்றொரு தரப்பினர் இப்படி செய்வதால் மட்டுமே விஜய் அரசியல் வாதியாக மாற முடியாது. தேர்தலில் நின்று வெற்றி பெற கட்சியில் தீவிரமாக இறங்கி பணியாற்றவேண்டும் என தெரிவித்து வந்தனர்.  விஜய்யும் தீவிர அரசியலில் இறங்கும் முயற்சியில் இருப்பதால் தன்னுடைய 68-ஆவது படத்தில் நடித்து முடித்த பின்னர், 3 வருடங்கள் முழு அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டது. 


ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும் சில தகவல்கள் வெளியான நிலையில் விஜய் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தக் கூட்டம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்றும் கூறப்படுகின்றது.





Advertisement

Advertisement