• May 22 2024

தூரிகையை இது தான் கொன்னுடுச்சு இனிமேல் இந்த சிரிப்பை பார்க்க முடியாது தானே- குரேஷி போட்ட எமோஷனல் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களை மட்டுமல்லாது பிரபலங்களையும் பேரதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.இவர் குறித்து விஜய்டிவி குரேஷி கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, கடந்த 2020ம் ஆண்டு பீயிங் வுமன் என்ற இதழை தொடங்கி சாதனை படைத்த பெண்களை பற்றி பத்திரிக்கை எழுதி உள்ளார்.


நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூரிகையின் உடல் மீட்கப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ளது. மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்த நிலையில் இவரது மரணம் குறித்து விஜய்டிவி பிரபலமான குரேஷி பின்வருமாறு கூறியதாவது இதை நம்பவே முடியல இந்த சிரிப்பு இனிமேல் இருக்காது தானே என மிகவும் மனவருத்தத்துடன் அவருடன் நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதே போல காதல் பட நடிகை சரண்யாவும் தூரிகை உயர்ந்த மன அழுத்தத்தினாலேயே இப்படி பண்ணியிருக்கிறாள். அவள் கடவுள் கிட்ட போயாவது நிம்மதியாக இருக்கட்டும் எனக் கூறியுள்ளார்.


இருப்பினும் போலிஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் வீட்டில் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் திருமணத்திற்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement