தமிழ் சினிமாவின் இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல கோணங்களில் இருந்த இயக்குநர் விக்ரம் இன்று திடீர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவரது இழப்பு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நிகழ்வு ஒன்றினை முடித்து விட்டு வரும் போது காரிலேயே இவரது உயிர் போயிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர் பாலு மகேந்திராவுடன் இணைந்து உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். ஆனாலும் தனது நண்பர்களான வெற்றிமாறன், தனுஷ் போன்று பெரிய நிலைக்கு வரவில்லை என்று ஏக்கத்தில் இருப்பார். ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து வைராக்கியத்தை சாதிக்க கூடிய ஒரு ஆள் இவர் என ஒரு சில வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மாத்திரம் ஆகியுள்ளதுடன் சின்ன வயதில் பிள்ளை ஒன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரது உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள், நண்பர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!