மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப்பட வரிசைகளில் ஒன்றான திரிஷ்யம் 3 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான ‘திரிஷ்யம்’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்த மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்தக் கதையின் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு மற்றும் கதாபாத்திர ஆழம், இந்தத் தொடரின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முன்னதாக ‘திரிஷ்யம் 3’ ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, மே 21, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பு ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
Listen News!