ஜீ தமிழில் கடந்த 5 வருடமாக ஹிட்டாக ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் செம்பருத்தி.இதில் பல முக்கிய நட்ச்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.
செம்பருத்தி சீரியல் முடிவடைந்த பின், குழுவினர் கொண்டாடும் ஷோவும் ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர்கள் மற்றும் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வில்லி நந்தினி ரோலில் நடித்து இருக்கும் நடிகை மௌனிகா தன்னை அந்த ஷோவில் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் கூறி இருக்கிறார்.
இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது இந்த சீரியலில் நடித்திருந்த எல்லோரையும் கவுரவித்த அவர்கள் என்னை மறந்து விட்டார்கள்.சபை மரியாதை கூட தரவில்லை.என்னோடு நடித்த சக நடிகர்களுக்கு கிடைத்த மரியாதை எனக்கு தரவில்லை.நான் அந்த மேடையில் வைத்தே கேட்டேன்.அதை டிவியில் டெலிகாஸ் கூட செய்யவில்லை.
எனக்கு ஒரு வீடியோவோ ஓடியோவோ போட்டு கவுரவிக்க சொல்லி நான் சொல்லவில்லை.இவ்வாறு இவர்கள் நடந்து கொண்டதால் எனக்கு கடைசி நாள் சூட்டிங்கிற்கு செல்ல விருப்பமில்லை.இருந்தும் எனது தொழிற்கு மரியாதை கொடுத்து சென்று இருந்தேன்.எனக்கு இந்த சீரியலில் இரண்டு நாள் சூட்டிங் மட்டுமே கிடைக்கும்.
இதனால் என்னை வேறொரு சனல் அழைத்த போது அங்கு சென்று நடிக்க சென்றிருந்தேன்.அங்கு சென்றவுடன் இவர்கள் என்னை போன் போட்டு அழைத்து எப்படி நீங்கள் அங்கே போவீர்கள் .அப்படி போனால் உங்களை இந்த சீரியலில் இருந்து துாக்கிடுவோம்.பணமா வேலையா முக்கியம் என்று நீங்களே யோசியுங்கள் என கூறி இருந்தார்கள்.
நான் அதை விட்டுவிட்டு எனக்கு வேலை தான் முக்கியம்.எனக்கு பணம் முக்கியம் இலலை என்று கூறினேன்.ஆனால் என் குடும்பத்தை நான் தான் பார்க்க வேண்டும்.காரை கூட லோனில் எடுத்து விட்டேன்.அதன் EMI கட்ட வேண்டும் என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.பிறகு அந்த சேனலில் எனக்கு இரட்டை ரோஜா சீரியலில் வில்லி கதாப்பாத்திரம் தந்தார்கள்.
அத்தோடு செம்பருத்தி சீரியிலில் வரும் கதாப்பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்து உடை அணிவேன்.இன்று இந்த சீன் என்றால் உடனே போய் உடை எடுப்பேன்.இவ்வாறு செய்த எனக்கு ஒரு மதிப்பு தரவில்லை.இதை என் சக நடிகர்கள் கூட கேட்கவில்லை.சில ரசிகர்கள் எனக்கு இதற்கு சப்போர்ட் பண்ணினாலும் சிலர் இதை ஏன் இன்ஸ்டாவில் சொல்லுகிறீர்கள் என கேட்கிறார்கள்.ஆனால் அந்த மேடையில் கேட்டேன் .அதை மட்டும் டெலிகாஸ் பண்ணவில்லை.யாரும் அதை வீடியோவும் எடுக்கவில்லை.அது தான் எனக்கு கவலையாக இருக்கிறது.
என் அம்மாவும் கேட்டார்.எனக்கு இதை கேட்கும் போது கவலையாக உள்ளது.எனக்கு தோத்திட்ட மாதிரி தோனுது.ஒரு நாள் நானும் வெற்றி பெறுவேன் என கண்கலங்கி அதில் நிறைய உண்மைகளை சொல்லியுள்ளார்.தற்போது அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
பிறசெய்திகள் ;
- ரஜனிகாந்தின் மகளாய் நான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றேன்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- தனுஷை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை-இது தான் விசயமா..?
- அந்த நடிகருடன் மட்டும் உறவில் உள்ளாரா..? உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா..!
- விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டு சீரியல் நடிகை செய்த செயல்-விளாசும் நெட்டிசன்கள்..!
- ரகசியத்தை போட்டு உடைக்கும் கண்ணம்மா -ஷாக்கில் பாரதி…நடக்கப்போவது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!