• May 07 2024

எங்களுக்கும் ஒரு காலம் வரும்- இரண்டாவது திருமணத்தில் இணையவுள்ள நாகசைத்தன்யா- சமந்தா போட்ட பதிவு

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவர்கொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையெ நல்ல விமர்சங்களைப் பெற்றது. தொடர்ந்தும் பிஸியாக நடித்து வருகின்றார்.


சமந்தா,நடிகர் நாகசைத்தன்யாவை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். 


இதனை அடுத்து நாகசைத்தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதென்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது.இந்த நிலையில் சமந்தா ஒரு பதிவினைப் போட்டுள்ளார். அதில் எங்களுக்கும் காலம் வந்தால் செழித்து வளருவோம் என்று பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் சமந்தா நாகசைத்தன்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளாரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement