நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ஏப்ரல் 12 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்றார். அவரது பிரச்சாரங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறுகின்றன என்றாலும், அவரைக் காண ரசிகர்கள் பெரும் திரளாக கூடுகின்றனர். கன்னியாகுமரியிலும் அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

இந்த சூழலில், ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் விஜயை நேரில் பார்க்க நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருந்தான். விஜய் வருவதற்கு முன்பே அவன் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பலரின் கவனத்தை ஈர்த்தன.
பின்னர், சைக்கிளில் பிரச்சாரம் செய்து வந்த விஜய் திடீரென தனது சைக்கிளை நிறுத்தி, அந்த சிறுவனிடம் சென்று அவனின் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டார். அந்த நிமிடம் அங்கு இருந்த அனைவரையும் உருக்கியது. இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த சிறுவன் பல மணி நேரம் காத்திருந்ததற்கான உண்மையான பலன் கிடைத்துவிட்டது என்று உணர்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் விஜயின் மனிதநேயத்தையும், ரசிகர்களின் மீது கொண்ட அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
Listen News!