தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பா. ரஞ்சித். இதனைத் தொடர்ந்து இவர் சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார்.
இந்த நிலையில் இவர் நடிகர் விக்ரமை வைதது அடுத்த படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இதற்கான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முதல் வெளியாகியது.
இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.இந்த படம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறித்து பேசும் கதைக்களம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அந்த படத்தின் டெஸ்ட் ஷூட் தொடங்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!