எதிர்பாராத போட்டியாளர்களுடன் கடந்த கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மிகவும் பரபரப்பாக துவங்கியது நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6 . கடந்த சீசன் முதல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த முறை 21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. மேலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த மைனா நந்தினி வெளியேறியதை தொடர்ந்து 20 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.
கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் பெரிதாக எந்த பிரச்னையும் நடைபெற வில்லை என்றாலும்,அசல் கோளாறு கூறிய வார்த்தையால் ஆயிஷா மனம் நொந்து அழுதார்.
மேலும் இதைத் தொடர்ந்து ஆயிஷாவை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வதுபோல் தெரிகிறது. ஜனனி நாமினேஷனில் அவரை சிக்க வைத்த போது ஆயிஷா வாக்குவாதம். பின்னர் நான் எதுவும் பேசவில்லை, என கூறி அப்சட் ஆனார்.
இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் பல கலகப்பான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதாவது மகேஸ்வரி பாத்ரூம் செல்ல சென்றபோது, அனைத்து பாத்ரூம்களிலும் ஆட்கள் இருந்ததால் அமுதவாணனை அழைக்கிறார்.
இவ்வாறு அமுதவாணன் ஏண்டா இங்க வந்து கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா... என்று கலகலப்பாக கேட்க, பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் ஜிபி முத்து ஜிப் போட மறந்து விடுகிறார்.
இதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு திரும்பி நின்றபடி ஜிப் போடுகிறார். இதைப் பார்த்த அமுதவாணன், ஏன் அப்படி திரும்பி நிற்கிறார் என்று கேட்க, அவர் ஜிப் போடல அதான் திரும்பி நின்று ஜிப் போடுகிறார் என சொன்னார். இதனை நெட்டிசன்கள் ஜிபி முத்துவை அண்ணா... அண்ணா என கூப்பிட்டு விட்டு தங்கையே அவரை அசிங்கப்படுத்தலாமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Listen News!