• May 05 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யாரு... கண்ணீர் கலந்த முகத்துடன் போட்டியாளர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சண்டைக்கும் சரி, அழுகைக்கும் சரி என்றைக்குமே பஞ்சம் இருப்பதில்லை.


இதில் ஜிபி முத்து தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி சென்று விட்டார். மிச்சமாக 20 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் எஞ்சி உள்ளனர்.

இந்நிலையில் வார இறுதியில் இந்நிகழ்ச்சியிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது வழமை. அதில் நேற்றைய தினம் விக்ரமன், ரச்சிதா, குயின்ஷி, ஆயிஷா, அசீம் ஆகியோர் ஷேவ் ஆகி விட்டனர்.

யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார் என்பது தொடர்பாக ரசிகர்களால் பல கருத்துக் கணிப்புக்கள் கூறப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் அதிகமானோர் சாந்தி தான் வெளியேறப்போகின்றார் எனக் கூறி வந்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் இந்த வாரத்தில் வெளியேறப் போவது யார் யார் எனக் கூறி கார்ட் ஐ எடுத்துக் காட்டுகின்றார் கமல்ஹாசன்.

அவர் அவ்வாறு கூறியதும் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் கலந்த முகத்துடன் பதற்றமடைந்த தோற்றத்தில் காட்சி அளிக்கின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கணிப்புக்களின் படி சாந்தி தான் வெளியேறுகின்றாரா அல்லது வேறு யாரும் வெளியேறுகின்றனரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement