• Jul 03 2024

வெளிநாட்டுக்குச் சென்ற சிலம்பாட்ட பட நடிகைக்கு நடந்த பிரச்சினை- அவரே போட்ட பதிவு

stella / 9 months ago

Advertisement

Listen News!


சினிமாவில் பிரபலமாக பலம் வந்த பல நடிகைகள் திருமணம் ஆன பிறகு இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளின் ஒருவர் நடிகை சனா கான். இவர் தமிழில் பயணம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு, தலைவன், சிலம்பாட்டம், அயோக்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்  2020ல் சையத் அனாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து அவர் விலகி தான் இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு தான் சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக்கொள்வதில் தான் தற்போது அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்.


இந்த நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு போய் இருக்கின்றார்.அங்கு போன பிறகு தான் அவர்களது லக்கேஜ் அனைத்தும் வந்து சேராதது தெரியவந்திருக்கிறது.


பைகள் எதுவும் கிடைக்காததால் மாற்று உடை கூட இல்லாமல் தவிப்பதாக சனா கான் கூறி இருக்கிறார். மேலும் நான்கு நாட்களாக குழந்தையின் உடைகள் கூட இல்லாமல் தவிப்பதாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement