• Sep 19 2024

நடிகர் மன்சூர் அலிகானிடம் இருந்து 50 லட்சம் பண மோசடி செய்த நபர்- போலீஸில் புகார் அளித்த நபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் மன்சூர் அலி கான். இவர் முரட்டுத்தனமான வில்லனாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

ஆனால் சமீப காலமாக காமெடியனாகவே பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வில்லன் கதாப்பாத்திரத்தை விட காமெடியன கதாப்பாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தியுள்ளது.

இது தவிர அடிக்கடி தேர்தலில் போட்டியிடுகிறேன் என கூறி அதற்காக வித்யாசமாக பிரச்சாரம் செய்து இணையத்தில் அடிக்கடி வைரலாகிறார். தற்போது மன்சூர் அலி கான் போலீசில் அளித்திருக்கும் புகாரில் தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

நிலம் வாங்குவதற்காக தந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை வரிசைக்கனி என்பரிடம் இருந்து திரும்ப பெற்று தரும்படி சென்னைஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் புகார் அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement