• Jul 27 2024

துடப்ப கட்டையை கையில் எடுத்த சீரியல் நடிகை.. படு வைரலாகும் இன்ஸ்டா போட்டோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆன ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி.

விஜய் டிவி சீரியல் நடிக்கும் போது இருவரும் காதலித்து, அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும், ஆண் குழந்தையும் ஒன்றும் உள்ளது. இருவரும் தமது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவ் நடிக்க, மானசா அதே தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது சின்னத்திரை சீரியல் நடிகை ஆல்யா மானசா ஒரு சந்தோஷமான செய்தியை தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதாவது அண்மையில் தான் தமது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லப்போவதாக சஞ்சீவ் ஆல்யா மானசா தம்பதியினர் பதிவிட்டு இருந்தார்கள்.


தற்போது சஞ்சீவ் ஆல்யா மானசா இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டி வருகின்றார்கள். அந்த வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரகப்பிரவேசம் நடக்க உள்ளதாம்.

இவ்வாறான நிலையில் வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து வருவதாக கையில்  துடப்ப கட்டையுடன் ஒரு கியூட் போட்டோவை வெளியிட்டு உள்ளார். 


Advertisement

Advertisement